தம்பதியரிடையே காதல் வேகத்தில் தொடங்கும் உறவு முடிந்த சில நிமிடங்களிலேயே சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. இதற்கு காரணம் உறவிற்குப் பின் நடைபெறும் சில விரும்பத்தகாத வேலைகள்தான்.
உறவுக்கு முந்தைய முன் விளையாட்டுக்கள் எப்படி சுவாரஸ்யத்தை அதிகரிக்கிறதோ அதேபோல உறவுக்குப் பிந்தைய செயல்பாடுகள் தம்பதியரிடையேயான அன்பின் ஆழத்தை அதிகரிக்கும். நேசத்தை உணர்த்தும்.
சின்னச் சின்ன விளையாட்டுக்களைப் போல சின்னச் சின்ன புரிதல்கள் வேண்டும். அப்பொழுதுதான் மீண்டும் மீண்டும் உறவைத் தேடும் ஆசையை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
தூக்கம்தான் எதிரி
உறவிற்கு முன்பு உறங்கிப் போவது எப்படி நல்லதில்லையோ அதேபோல உறவுக்குப்பின் உடனே உறக்கத்தை நோக்கி ஒடுவதும். ஆற அமர நடந்த நிகழ்வுகளை அசைபோடலாம். அன்பாய் தலைகோதி, எப்படி இருந்துச்சு என்று கேட்கலாம். இதனால் நேசம் அதிகரிக்கும்.
உடனே குளிக்காதீங்க
உறவிற்கு முன்பு ஷவரில் குளிப்பது உற்சாகத்தை தரக்கூடியது. அதுவே உறவிற்குப்பிந்தைய குளியல் சுவாரஸ்யத்தை கெடுத்துவிடும். சிலர் என்னவே நடக்கக் கூடாதது நடந்து விட்டது என்பதைப் போல உறவு முடிந்த உடனே சில பாத்ரூமை நோக்கி ஓடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. துணையை இறுக்கிப் பிடித்துக் கொஞ்சநேரம் படுத்திருக்கலாம். அதைத்தான் பெரும்பாலோனோர் எதிர்பார்க்கின்றனர்.
அந்த நேரத்தில போன்
நடு ராத்திரி என்றும் கூட பார்க்காமல் சிலர் போன் செய்வார்கள். அந்த நேரத்தில் செல்போனை சுவிட் ஆஃப் செய்துவிடுங்களேன். உறவு முடிந்த உடன் போன் பேச ஓடுவதை எந்த துணையும் விரும்ப மாட்டார்.
படிக்கப் போகாதீங்க
என்னவே கடமை முடிந்தது இனி வேற வேலையைப் பார்க்கலாம் என்று சிகரெட் பிடிக்கவோ, படிக்கவோ சென்று விடுவார்கள். அவ்வாறு செய்யக்கூடாது. அதற்கு பதிலாக துணையை கட்டி அணைத்துக் கொண்டு கதகதப்பாக கதை பேசுங்களேன்.
தனி உறக்கம் வேண்டாமே
உறவின் போது மட்டும் சேர்ந்து கொள்வதும் மற்ற நேரங்களில் தனியாக படுக்கையைப் போடுவதுமாக சிலர் செய்கின்றனர். ஆனால் அது கணவன் மனைவி உறவிற்கு நல்லதல்ல. செக்ஸ் முடிந்த பின்னரும் இருவரும் ஒரே படுக்கையில் ஒன்றாக அணைப்பில் படுத்துக் கொள்வதுதான் சுவாரஸ்யம்.
கொஞ்சம் தனிமை
குழந்தைகள் இருந்தால் அன்றைய தினத்தில் மட்டுமாவது அவர்களை தனியாக படுக்கவைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் செக்ஸ் உறவுக்கு எப்படி தனிமை அவசியமோ அதுபோல உறவுக்குப் பிந்தைய பேச்சுக்களுக்கும் தனிமை அவசியம்.
சாப்பிடாதீங்க
ஒருசிலர் என்னவோ அப்போதுதான் பசி எடுக்கிறது என்பதுபோல சாப்பிடுவார்கள் எனவே உறவுக்குப் பின்னர் கண்டிப்பாக சாப்பிடப் போகக் கூடாதாம். அது உறவின் மொத்த சுவாரஸ்யத்தையும் கெடுத்து விடும்.



Click it and Unblock the Notifications



