
இது தொடர்பாக இங்கிலாந்தில் 2000 பெண்களிடம் சர்வே ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது பதிலளித்த பெண்கள், அந்தரங்கமான நேரத்தில் செல்போன் வந்தால் எடுத்து பேசுவதில் தவறில்லை என்று கூறியுள்ளனர். மூன்றில் ஒரு பெண் இந்த பதிலை கூறியுள்ளார்.
ஆர்கஸம் நெருங்கும் நேரத்தில் கூட போனில் பேசலாம் என்று 20ல் ஒருவர் கூறியுள்ளனராம். 45 சதவிகிதம் பேர் படுக்கை அறையில் மின் அஞ்சல் செக் செய்கின்றராம்.
சாப்பிடும் போதோ, செக்ஸ் உறவின் போதோ செல்போனில் அழைப்பு வந்தால் எடுத்துப் பேசுவதில் தவறு எதுவும் இல்லை என்று 54 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அதேபோல் டாய்லெட்டில் இருக்கும் போது செல்போனில் பேசுவதில் தவறில்லை என்று 57 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர். இதை பார்க்கும் போது செல் போனுக்குத்தான் நிறைய பேர் அடிமையாக கிடக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.
இந்த சர்வே இங்கிலாந்தில் எடுக்கப்பட்டதுதான் இந்தியாவில் என்ன நினைக்கிறார்களோ யாருக்குத் தெரியும்?



Click it and Unblock the Notifications



