•  

அன்பும் அரவணைப்பும் அவசியம்

Relationship
 
வீட்டு வேலைகளை முடித்துவிட்டு படுக்கைக்கு வரும் பெண்களுக்கு கிடைக்கும் மன அமைதியே கணவரின் அணைப்பில் கிடைக்கும் தாம்பத்ய சுகம்தான். அதிலும் அவசரத்துடன் செயல்பட்டால் ஆண்கள் மீது கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக ஒரு ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரியம் முடிந்ததென்று கால்நீட்டி படுத்துவிடும் கணவர்கள் மீது நாளுக்கு நாள் வெறுப்புதான் அதிகமாகும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 'தி ஜர்னல் ஆப் செக்ஸூவல் மெடிசின்' என்ற இதழில் இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

சுயநலம் மிக்க ஆண்கள்

5600 ஜப்பானிய பெண்களிடம் இதுதொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 50 சதவீதம் பேர், செக்ஸ் உறவுக்குப் பின்னரும் கூட நீண்ட நேரம் தங்களது பார்ட்னர் தங்களுடன் சேர்ந்திருப்பதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

44 சதவீதம் பேர் 'முன் விளையாட்டை' அதிகம் விரும்புவதாக கூறியுள்ளனர். அதாவது கிளைமேக்ஸை விட முன் விளையாட்டுதான் தங்களுக்கு அதிகம் பிடித்திருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

38 சதவீதம் பேர் நீண்ட நேர உடலுறவே தங்களுக்குப் பிடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர். 38.8 சதவீதம் பேர் செக்ஸ் விளையாட்டுக்கள், முறைகள் குறித்து தங்களது பார்ட்னர்களுடன் விவாதிப்பதில்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேசமயம், தங்களது பார்ட்னர்கள், செக்ஸ் விஷயத்தில் 'எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக' இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பெண்களிடம் பொதுவாக உள்ளதாம். கருத்துக் கணிப்பி்ல கலந்து கொண்டவர்களில் 30 சதவீதம் பேரில், 25.5 சதவீதம் பேர் தங்களது பார்ட்னர்கள், சுய நலம் மிக்கவர்கள் என கருத்து தெரிவித்துள்ளனர். 6.9 சதவீதம் பேர் அதிக சுயநலம் என்கிறார்கள்.

கணவர் மீது கோபம்

காதல் கனிந்து உறவைத் தொடங்கும்போது நடத்தப்படும் முன் விளையாட்டு க்கள் ஒரு ஆரம்பம்தான். ஆனால் விளையாட்டு முடிந்த பின்னர்தான் பெண்களின் உணர்வுகள் பொங்கிப் பெருகுமாம்.

அந்தசமயத்தில், அதை பொருட்படுத்தாமல் அல்லது கவனிக்காமல், அரவணைத்து அமைதிப்படுத்தாமல், தூங்கப் போகும்போதுதான் ஆண்கள் மீது பெண்களுக்கு கோபம் கோபமாக வருமாம்.

அன்பும் அரவணைப்பும்

முன் விளையாட்டு மட்டுமல்ல, உறவுக்குப் பிந்தைய நெருக்கமும், அன்யோன்யமும், அரவணைப்பும் கூட ரொம்ப முக்கியமாம். அப்போதுதான் அவர்களுக்கு முழுமையான திருப்தி ஏற்படுகிறதாம்.

ஆண்களுக்கு உடலுறவு மட்டுமே முக்கிய நோக்கம். அந்த 'டார்கெட்'டை முடித்தவுடன் 'ரிடயர்ட்' ஆகி விடுகிறார்கள் என்ற பொதுவான கருத்து உள்ளது.
அதேசமயம், உடலுறவை முடித்த பின்னரும் கூட நீண்ட நேரம் தலையைக் கோதியபடியோ அல்லது அரவணைத்தபடியோ இருக்கும் ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்குமாம்.

இப்படிப்பட்ட உறவுதான் நீண்ட காலத்திற்கு நீடிக்கும் என்றும் பெண்கள் கருதுகிறார்கள். அப்படிச் செய்யும் ஆண்கள் மீதுதான் பெண்களுக்கு காதல் உணர்வு பொங்கி வழியுமாம்.

English summary
men primarily want them for sex or to be caregivers. This explains why both men and women often feel used in relationship.Neither gender feels valued as a human being, but only for how they can satisfy the needs of the other. Both sexes resent each other and play out this resentment in relationships.
Story first published: Sunday, July 24, 2011, 11:58 [IST]

Get Notifications from Tamil Indiansutras