•  

செக்ஸ் உறவுக்கு அடிக்கடி அழைக்கும் மனைவி-போலீஸ் உதவியை நாடிய கணவர்

Mad Sex
 
பெர்லின்: செக்ஸ் உறவு போதாது, போதாது என்று என்று கூறி அடிக்கடி என்னை எனது மனைவி செக்ஸ் உறவுக்கு அழைத்து பெரும் தொல்லை கொடுக்கிறார். அவரிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று கோரி ஒரு கணவர் போலீஸ் உதவியை நாடியுள்ளார். இது நடந்துள்ளது ஜெர்மனியில்.

அந்த அப்பாவிக் கணவர் துருக்கியைச் சேர்ந்தவர். ஜெர்மனியில் பெர்லின் நகரில் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது வீட்டுக்கு அருகில் உள்ள போலீஸ் நிலையத்தை நாடினார். அவர்களிடம், எனது மனைவி என்னை தினசரி செக்ஸ் வைத்துக் கொள்ளுமாறு கூறி அனத்துகிறார். நான் எவ்வளவுதான் உறவு வைத்துக் கொண்டாலும் திருப்தி அடைய மாட்டேன் என்கிறார்.

எங்களுக்கு கல்யாணமாகி 18 வருடங்களாகி விட்டது. 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளாக எனது மனைவியின் செக்ஸ் தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் நான் படுக்கை அறைக்குள் போக முடியவில்லை. உள்ளே போனாலே செக்ஸ் உறவுக்கு அழைக்க ஆரம்பித்து விடுகிறார். இதனால் நான் வீட்டு சோபாவில்தான் தினசரி தூங்க நேரிடுகிறது.

அப்படியும் கூட அவர் விடுவதாக இல்லை. எங்கு இருந்தால் என்ன, என்னை திருப்திப்படுத்து என்று கூறி தொல்லை செய்கிறார். கோப்படுகிறார். என்னை எனது மனைவியின் தொல்லையிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கூறினார். இதையடுத்து போலீஸார் அவருக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் சற்று அமைதி அடைந்த அவர், தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக கூறி விட்டுச் சென்றார்.

விவாகரத்து நடவடிக்கைகள் முடியும் வரை அவரை அதிகம் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அவரது மனைவியிடம் அறிவுரை கூற போலீஸார் தீர்மானித்துள்ளனராம்.

English summary
A desperate Turkish man living in Germany has turned to the police for protection from his insatiable wife's constant demands for sex, authorities said. The man came to his local police station in southwestern Germany yesterday saying that he had been sleeping on the sofa for the past four years to escape the clutches of his wife of 18 years and mother of their two children. "Now he has decided to get a divorce and to move out... in the hope of finally getting some rest, particularly as he is anxious to arrive at work well rested," police said in a statement.
Story first published: Thursday, January 27, 2011, 11:50 [IST]

Get Notifications from Tamil Indiansutras