•  

சரியாக விளையாடாவிட்டால் எப்படி...?

Sex
 
எத்தனையோ வாட்டி சொல்லிட்டேன், இருந்தாலும் அவர் புரிஞ்சுக்கவே மாட்டேங்கிறார்... இது பல பெண்களின் மனக்குறையாக இருக்கிறது. தங்களுக்குள் குமைந்தபடி இதுகுறித்து நெருக்கமான தோழிகளிடம் தங்களது வேட்கையை வெட்கத்தை விட்டு பகிரிந்து கொள்ளும் நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.



ஓரல் செக்ஸ்...இதுதான் அந்தப் பிரச்சினை. பெரும்பாலும் ஆண்கள்தான் ஓரல் செக்ஸில் அதிக நாட்டம் உடையவர்கள் என்று சொல்வார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. பெண்களுக்கும் அதில் நிறையவே விருப்பம் உண்டு. அதேசமயம், தங்களிடம் நேரடி உறவை விட அதிக நேரம் முன்விளையாட்டுக்களில் ஈடுபடும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகிறார்களாம்.



லேசுபாசாக விளையாடி விட்டு பிறகு உறவில் ஈடுபட்டு சட்டுப்புட்டென்று முடிக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிப்பதில்லையாம். நிறைய விளையாட வேண்டும், களைக்க களைக்க விளையாட வேண்டும், அதன் பிறகே 'வேட்டை'யாட வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுகிறார்களாம்.



பெண்களைப் பொறுத்தவரை அவர்களிடம் நீண்ட நேரம் ஒரு ஆண் விளையாடும்போது அவன் தங்கள் மீது வைத்துள்ள பாசத்தை அளவிட முடிவதாக கூறுகிறார்கள்.



தகதகவென்று தொடங்கும் விரக தாபத் தீயை, திரியைத் தூண்டி விட்டு நன்கு பிரகாசமாக எரிய விட்டு அதன் பின்னர் அதை அணைக்கும்போதுதான் உண்மையான சுகம், இன்பம் தங்களுக்குக் கிடைப்பதாக பெண்கள் கூறுகிறார்கள்.



ஒவ்வொரு பெண்ணும் மணிக்கணக்கில் தனது மனாளனின் கையில் சிறைப்பட்டுக் கிடப்பதை விரும்புகிறாள். உடல் முழுக்க இடப்படும் முத்தங்கள், நாவின் வருடலில் உடலெங்கும் காமத் தீ கொழுந்து விட்டெரியும் வேகம், நாடி நரம்புகள் புடைத்தெழுந்து விரக தாபத்தின் விஸ்வரூபத்தைக் கண்டு சந்தோஷிக்கும் தருணங்களை பெண்கள் நிறையவே விரும்புகிறார்களாம்.



பெண்களைப் பொறுத்தவரை, வீணையை மீட்ட மீட்டத்தான் அதிலிருந்து அருமையான நாதங்களும், கானங்களும் கரைபுரண்டோடி வரும் என்பது கருத்து. உறவு என்பது ஒரு சில நிமிடங்களில் முடிந்து போய் விடக் கூடியது... ஆனால் இந்த முன்விளையாட்டு என்பது இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் அன்பையும், காதலையும் உறுதிப்படுத்திக் கொள்ள, வெளிப்படுத்திக் கொள்ள கிடைத்த நல்ல வாய்ப்பு.



நான் உன்னை சந்தோஷப்படுத்துகிறேன், அதேபோல என்னை நீ சந்தோஷப்படுத்து என்பதுதான் பெண்களின் குறைந்தபட்ச கோரிக்கை. என் மதன மையங்களை உன் நாவாலும், விரல்களாலும், கைகளாலும் வருடிக் கொடு, வசந்தம் தேடிக் கொடு, வாலிபத்தை மீட்டெடு என்பதே பெண்களின் கோரிக்கை. இதையெல்லாம் அவர்கள் வாய் விட்டுச் சொல்வதில்லை. புரிந்து தெரிந்து நடந்து கொள்ள வேண்டியது ஆண்களின் கடமையாகும்.



பெரும்பாலான ஆண்கள் முன் விளையாட்டுக்களுக்கு அதிக நேரம் ஒதுக்குவதில்லை. இதற்குப் பெயர்தான் 'செக்ஸ் சோம்பேறித்தனம்'. செக்ஸ ரீதியான இந்த சோம்பேறித்தை கைவிட வேண்டியது உறவுகளில் முக்கியம் என்கிறார்கள் வல்லுநர்கள்.



இப்படிப்பட்டவர்களிடம் சம்பந்தப்பட்ட பெண்கள் உட்கார்ந்து மனம் விட்டுப் பேசலாம். நீ இப்படிச் செய்தால் நான் அதிகம் தூண்டப்படுவேன். அது உனக்குத்தான் நல்லது என்று சொல்லிப் புரிய வைக்கலாம். எனக்கு இது பிடித்துள்ளது, இதைச் செய், இப்படிச் செய் என்று நேரடியாகவே சொல்லலாம்.



சிலருக்கு அலுப்பு அதிகமாக இருக்கும்போது முன்விளையாட்டுக்களை சுருக்கமாக செய்யப் பார்ப்பார்கள். ஒருவேளை உண்மையிலேயே உடல் சோர்வு போன்றவை இருப்பதை அறிந்தால் கட்டாயப்படுத்தத் தேவையில்லை. ஆனால் அது தொடர்கதையானால் சற்று கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.



இரு கைகளையும் சேர்த்துத் தட்டினால்தான் ஓசை வரும்... எனவே இருவரும் இணைந்து இன்பத்தில் திளைக்க என்ன தேவையோ அதைச் செய்யும் வழியைக் காண்பதே நல்லது.




English summary
My husband never gives me oral sex, despite him asking me to perform it on him several times a month. This is a common complaint among the women. These things should be reciprocal. Few things are more galling than a lover who expects their other half to do all the giving. It's bad-mannered of your spouse to expect you to pleasure him in bed without returning the same courtesy.
Story first published: Monday, February 11, 2013, 15:21 [IST]

Get Notifications from Tamil Indiansutras