
கணவனுடன் காதலில் திளைத்திருக்கும் போதுகூட நாளைக்கு என்ன சமைக்கலாம் என்பது பற்றி பல பெண்கள் நினைத்துக்கொண்டிருப்பார்களாம்.
இவரு எப்ப முடிக்கிறது. நான் எப்ப தூங்குறது? காலையில சீக்கிரம் எழுந்திருக்கணுமே என்பது பெரும்பாலான பெண்களின் கவலையாக இருக்கிறது. இந்தநேரத்தில குழந்தை கண் முழிச்சிட்டா என்ன பண்றது என்பது 20 சதவிகித பெண்களின் கவலையாம்.
கணவரோடு செக்ஸ் வைத்துக்கொள்வது, அவரோடு தூர இடங்களுக்கு சுற்றுலா செல்வது, நடனம் மற்றும் நல்ல உணவு உண்பது ஆகிய மூன்றில் எதற்கு நீங்கள் முன்னுரிமை கொடுப்பீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த பெண்களில் 51 சதவிகிதம் பேர் கணவரோடு சற்று தூரமான பகுதிக்கு இன்பச் சுற்றுலா செல்வதைத்தான் விரும்புவோம் என்று கூறியிருக்கிறார்கள்.
38 சதவீத பெண்கள் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு கணவரோடு ஜோடியாக நடனம் ஆட வேண்டும். பின்பு நன்றாக சாப்பிட வேண்டும். அதுவே எங்களுக்கு பிடித்தமானவை என்று கூறியிருக்கிறார்கள். கணவரோடு தனிமையில் உட்கார்ந்து சிரித்து மகிழ்ந்து பேசி விட்டு, உறவினைத் தொடர்வோம் என்று மிகக்குறைந்த அளவிலான பெண்களே தெரிவித்துள்ளனர்.
செக்ஸ் முடிந்த பின்னர் என்ன நினைப்பீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அடுத்தமுறை எப்போ கூடுவோம் என்று ஆவலுடன் எதிர்பார்ப்பதாக 37 சதவிகித பெண்கள் கூறியுள்ளனர். செக்ஸ் முடிந்த உடன் உடல் முழுவதும் நெகிழ்ச்சியாகி, வழக்கத்தை விட அதிக சுறுசுறுப்பாக இருக்கிறேன். என்னுடைய அன்றாட வேலைகளை வேகமாக பார்க்கிறேன் என்று 19 சதவீதம் பேர் கூறி யிருக்கிறார்கள். நீண்டநாட்கள் இருந்த உடல்வலி, தலைவலி போயே போச்சு என்று 21 சதவிகிதம் பேர் கூறியுள்ளனராம். இருவருக்கும் இடையே ஒருவித திருப்தியையும், நம்பிக்கையையும் தாம்பத்ய உறவு ஏற்படுத்தியிருக்கிறது என்று 9 சதவீதம் பேரும் தெரிவித்திருக்கிறார்கள்.
பல நாட்களாக சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டேன். திருப்தியான உறவு கொண்ட பின்பு சில நாட்களாக நன்றாகத் தூங்குகிறேன் என்று 14 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.



Click it and Unblock the Notifications



