செக்ஸ் பார்ட்டியில் சீன அதிகாரிகள் நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்கள் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இது சீன அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிச கொள்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சீனாவில் இணையதளங்களுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான மற்றும் ஆபாச வெப்சைட்டுகளை அரசு தடை செய்து வருகிறது பல வெப்சைட்டுகள் அதிரடியாக நீக்கப்படுகின்றன. அப்படி இருந்தும் இணைய தளத்தில் ஊடுருவி சிலர் ஆபாச காட்சிகளை வெளியிடுவது எப்படி என்று அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமீப காலமாக அரசு அதிகாரிகள் மீது பரபரப்பு புகார்கள் அதிகரித்து வருகின்றன. சில தினங்களுக்குமுன், மூத்த அதிகாரிகள் மூன்று பேர், லுஜியாங் கவுன்டியில் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொண்டனர். அவர்கள் நிர்வாணமாக 2 அழகிகளுடன் இருந்த போட்டோக்கள் இன்டர்நெட்டில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மூத்த அதிகாரிகளின் முற்றும் துறந்த நிலையை கண்டு ரசித்தவர்கள் அதனை டவுண்லோடு செய்து பரப்பி வருகின்றனர். லட்சக்கணக்கானோர் அந்த போட்டோக்களை பார்த்து விமர்சனம் செய்துள்ளனர். இதனால் சீன அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே சர்ச்சைக்குறிய படங்கள் குறித்து கருத்து தெரிவித்த மூத்த அதிகாரி, இது போன்று சில அதிகாரிகள் செய்யும் தவறுகளினால் அரசுக்கு கெட்டப்பெயர் ஏற்படுவதாக கூறினார். இந்த புகைப்படத்தின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது.