
சிவப்பு நிற ஆடைகள் நரம்புகளுக்கும், சிந்திக்கும் சக்திக்கும் வலுவூட்டும். ரத்த ஓட்டத்தை சரியாக கவனித்துக்கொள்ளும், தொற்றுநோய் உள்ளவர்கள், இதயபாதிப்பினால் எக்ஸ்ரே எடுப்பவர்கள், உடல் எரிச்சலால் கொப்புளங்கள் உள்ளவர்கள் இந்த உடையை அணியலாம். சுறுசுறுப்பாக வேலை செய்வதற்கு ஏற்ற சக்தியை சிவப்பு நிற ஆடையைத் தருகிறது என்கின்றனர் நிபுணர்கள்.
சிவப்பு நிறமானது சக்தி, ஆற்றல் மற்றும் வலிமையை குறிக்கும் என்று ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிற உடைக்களை அணிவதனால் புற்றுநோய் கூட குணமாகுமாம். ரத்தம் மற்றும் ரத்தஅழுத்தம் தொடர்பான நோய்களை நீக்கி மன அழுத்தத்தை போக்குகிறது உடலுக்கும் வலிமை தரும் என்கின்றனர் நிபுணர்கள்.
சிவப்பு நிற உடை அணிந்துள்ள பெண்களைப் பார்த்த உடன் ஆண்களுக்கு நாடித்துடிப்பு அதிகரிக்கிறது. இதற்கு காரணம் அவர்கள் அணிந்துள்ள ஆடையின் வர்ணம்தான் என்று டாக்டர் ஜாய்ஸ் நெல்சன் தெரிவித்துள்ளார். வண்ண மருத்துவம் மற்றும் கிரிஸ்டல் மருத்துவம் பற்றி ஆய்வு செய்த இந்த மருத்துவர் இந்த உண்மையை கண்டறிந்துள்ளார்.
படுக்கை அறையில் மனைவி சிவப்பு நிற உடையை அணிந்து கொண்டிருந்தால் ஆண்மையின் வேகம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். எனவேதான் முதலிரவு நாளில் பெண்கள் சிவப்பு நிறம் உடைய புடவையை கட்டுகின்றனர். இந்த நிறம் பெண்களை அதிக கவர்ச்சிகரமானவர்களாக காட்டுகிறதாம். ஆண்களின் உணர்வுகளை தூண்டுவதோடு அவர்களின் செக்ஸ் ஆர்வத்தை அதிகரிக்கிறதாம்.



Click it and Unblock the Notifications



