•  

சிறிய மார்பகத்தில்தான் அதிக கிளர்ச்சி கிடைக்குமாம்: ஆய்வில் தகவல்

Sex
 
இந்தியாவில் பத்தில் எட்டு பெண்களுக்கு மார்பகம் தொடர்பான பிரச்சினைகள் உண்டு. அதாவது மார்பகங்கள் தொய்வடைந்து போதல், சரியான ஷேப்பில் இல்லாதது என ஆளாளுக்கு ஓர் கவலை. எல்லாவற்றுக்கும் அடிப்படை காரணம் அவர்கள் அணிகிற மிகத் தவறான பிரா என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சிறிய மார்பகங்களால் விவாகரத்து வரை போன திருமண உறவுகளும் உண்டு.



ஆனால் பல ஆராய்ச்சிகளில் பெண்ணின் மார்புகள் சிறியதாக இருந்தால் அவை மிகவும் உணர்ச்சியுடையவை, அதிகக் கிளர்ச்சியைக் கொடுக்கக் கூடியவை என நிரூபிக்கப் பட்டுள்ளன. மற்ற விலங்குகள் எவ்வாறு பால் கொடுக்கும் மார்பகங்கள் பற்றிக் கவலைப்படுவதில்லையோ, அதே போல் பழங்கால மனிதர்களும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதில்லை. இன்றும்கூட பழங்குடியினர் மார்புகளை ஒரு செக்ஸ் உறுப்பாகக் கருதுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்.



ஆண்களைப் பொறுத்தவரை பெரிய அளவிலான மார்பகங்களைத்தான் கவர்ச்சியானதாக நினைக்கிறார்கள். மேலும் இன்றைய பத்திரிகைகள், இணையம், தொலைக்காட்சி மூலமாக இக்கருத்து மக்களிடையே ஆழமாகப் பதிந்து விட்டது. ஆனால் சிறிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி அதிகமாக இருக்கும் என்பதால் உறவின் போதான கிளர்ச்சி அதிகமாக இருக்கும். பெரிய மார்பகங்களில் நரம்புகளின் அடர்த்தி குறைவாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.



அழகான சருமம் வேண்டும் என்பவர்கள் எவ்வாறு சத்தான உணவுகளை சாப்பிடுகின்றனரோ அதேபோல அழகான மார்பகம் வேண்டும் என்பவர்கள் தினசரி உணவில் கேரட், கீரை, சோயா பீன்ஸ், ஆலிவ் ஆயில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் அழகான மார்பு கிடைப்பதோடு மார்பகப் புற்று நோயும் தவிர்க்கப் படும் என்கின்றனர் நிபுணர்கள்.



மார்பகங்கள் சுருங்காமல் இருக்க முகத்துக்கு தினமும் செய்கிற கிளென்சிங், டோனிங் மற்றும் மாய்சரைசிங்கை மார்பகங்களுக்கும் செய்ய வேண்டும். அதாவது முதலில் கிளென்சிங் மில்க்கில் பஞ்சை நனைத்து மார்பகங்களைத் துடைத்து எடுக்க வேண்டும். அதன் மேல் டோனரில் நனைத்த பஞ்சை ஒற்றி எடுக்க வேண்டும். சில நிமிடங்கள் கழித்து மாயிச்சரைசர் தடவிக் கொள்ள வேண்டும்.



வாரம் இரண்டு அல்லது மூன்று முறைகள் நீங்கள் உங்கள் மார்பகங்களுக்கான அழகு சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதும் முக்கியம். அதாவது ஓட்மீல் அல்லது கோதுமைத் தவிடு கொண்டு மார்பகங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிக மிக மென்மையாகத் தேய்த்துத் தடவிக் கழுவ வேண்டும்.



மாதுளம் பழத்தின் தோலைக் காய வைத்தப் பொடித்துக் கொள்ளவும். அத்துடன் கடுகெண்ணெய் கலந்து மார்பகங்களில் தடவி சிறிது நேரம் ஊறிக் குளித்து வந்தாலும் மார்பகங்கள் நல்ல வடிவமும், அழகும் பெறும். வயதுக்கேற்ற மார்பக வளர்ச்சி இல்லாத டீன் ஏஜ் பெண்களுக்கு இந்த சிகிச்சை நல்ல பலன் தருகிறதாம்.



மார்பகங்கள் தொய்வடைந்து காணப்பட்டால் வேப்பிலை மற்றும் கேரட் விழுது கலந்து பேக் மாதிரிப் போடலாம். முதலில் பாதாம் கலந்த கிரீமினால் மார்பக ஏரியாவை நன்றாக கீழிருந்து மேலாக வட்ட வடிவத்தில் மசாஜ் செய்து விட்டு, அதன் பிறகு இந்தப் பேக்கைப் போடவும். ஒரு முறை போட்டதுமே பலனை எதிர்பார்க்காதீர்கள். தொடர்ந்து பல முறைகள் முயற்சித்தால் பலன் நிச்சயம்.



English summary
Every woman should be happy and comfortable with the body she has. Unfortunately, many women are not. If you are unhappy with your breasts and want to make them appear larger and firmer, read on for tips and tricks on how to achieve that without surgery or pills.
 
Story first published: Saturday, August 11, 2012, 17:28 [IST]

Get Notifications from Tamil Indiansutras