•  

சுத்த பத்தமாத்தானே இருக்கீங்க...?

Sex
 
செக்ஸ் என்பதே ஆச்சரியமான விஷயம்தான். செக்ஸ் மட்டுமல்ல அது தொடர்பான சில விஷயங்களும் கூட ஆச்சரியமானதுதான். பலருக்கு செக்ஸ் குறித்த பல விஷயங்கள் தெரிவதில்லை. அதிலும் வித்தியாசமான புள்ளிவிவரங்கள் தெரிவதில்லை.



எல்லோரையும் போலத்தான் மனிதர்களும் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள். செக்ஸ் உறவின்போது நமக்குள் நடக்கும் பல விஷயங்ளைத் தெரிந்து கொள்ள முனைந்தால் சில சமயங்களில் அறுவெறுப்பாக கூட போய் விடும்.



ஆனால் உண்மையை மறைக்க முடியாது இல்லையா... அதுபோலத்தான் செக்ஸின் போது நடைபெறும் சில விஷயங்களையும் நாம் மறுக்காமல் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும். முத்தமிடும்போதும், உறவின்போதும், பல விஷயங்கள் நமக்குத் தெரியாமலேயே நடக்கின்றன.



இதழுடன் இதழ் பதித்து முத்தமிடும்போது லட்சக்கணக்கான பாக்டீரியாக்களை நாம் ஒருவருக்கு ஒருவர் பாஸ் செய்து கொள்கிறோம். நமது வாயில் ஏற்கனவே 500 வகையான பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். இதில் பாதி பாக்டீரியாக்கள் நாக்கில்தான் இருக்கின்றனவாம்.



எனவே உதடுகளை 'எங்கெல்லாம்' பயன்படுத்துகிறோமோ அங்கெல்லாம் இந்த பாக்டீரியாக்கள் ஷிப்ட் ஆகிச் செல்லும் வாய்ப்புகள் இருக்கின்றனவாம்.



ஒரு நாளைக்கு உலகம் முழுவதும் எத்தனை பேர் செக்ஸ் வைத்துக் கொள்கிறார்கள் என்று தெரியுமா... கிட்டத்தட்ட 10 கோடி ஜோடிகள் ஒரு நாளைக்கு செக்ஸ் வைத்துக் கொள்கிறார்களாம். அதாவது இந்த நிமிடத்தில் 65,000 ஜோடிகள் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்.



செக்ஸ் உறவின்போது வெறும் உடம்புடன் ஈடுபடும்போது வியர்வை ஆறாகப் பெருக்கெடுக்கும், உடலும் உடலும் உரசும்போது வித்தியாசமான சத்தம் வரும். இது மற்றவர்களுக்குக் கேட்கக் கூடியவாய்ப்புகள் உள்ளன. அத்தோடு வியர்வையில் இருவரும் பின்னிப் பிணையும்போது ஆரோக்கியக் கேடு்ம் ஏற்படுமாம். எனவே துணியைப் போட்டுக் கொண்டு உறவில் ஈடுபடுவது நல்லது, ஆரோக்கியமானது என்கிறார்கள்.



வாய் உறவைக் கடைப்பிடிப்பவர்கள் தவறாமல் மேற்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியதுதான். குறிப்பாக பெண்கள். பெண்கள் தங்களது அந்தரங்க உறுப்பை தினசரி சுத்தபத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வாடை அடிக்குமாம். அதை விட முக்கியமாக ஈஸ்ட் உருவாகி தொற்று நோய்களைக் கொண்டு வந்து விடுமாம்.



எனவே பெண்கள் அந்தரங்க உறுப்புகளை சுத்தமாக வைத்திருந்தால் ஆண்களும் அசவுகரியம் இல்லாமல் வாய் உறவை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இந்த சுத்த சுகாதாரம் ஆண்களுக்கும் பொருந்தும். சிறுநீர் கழித்தால் உடனே சுத்தமாக கழுவி விட வேண்டும். அப்படியே வந்து உறவில் ஈடுபடுதல் அல்லது மனைவியரை வாய் உறவுக்கு கட்டாயப்படுத்துதல் கூடவே கூடாதாம்.



உறவு முடிந்ததும் பலரும் செய்யும் தப்பு இதுதான். அதாவது உறவு கொண்ட இடத்தை சுத்தப்படுத்த வேண்டும். தரையில் படுத்திருந்தால் தரையை சுத்தமாக ஒரு ஈரத் துணியை வைத்துத் துடைத்து விட வேண்டுமாம். பெட்டாக இருந்தால் பெட்ஷீட்டை மாற்றி விட வேண்டும். அதேபோல சிறு குழந்தைகள் இருந்தால், உறவு முடிந்ததும் அவர்களுக்கு அருகில் நெருக்கமாக படுக்கக் கூடாதாம், குறிப்பாக பெண்கள் படுக்கக் கூடாதாம்.



இப்பசடிச் சின்னச் சின்னதாக நிறைய செய்யக் கூடாதவைகள் இருக்கிறதாம்.. தெரிஞ்சுக்கிட்டு ஜாக்கிரதையா நடந்துக்குங்க...!

Read more about: sex, செக்ஸ், kamasutra
English summary
We know sex is amazing, but there are certain things that can give you a creepy feeling about sex. Unlike in movies, real life sex can be embarrassing at times, and can even lead to sexual mishaps. As part of the animal kingdom, we human beings have sex like the way other animals do. If you imagine the biological things that happen to our body during sex, you will definitely find it absolutely disgusting.
 

Get Notifications from Tamil Indiansutras