•  

வலி இல்லாத உறவில்தான் ஒத்துழைப்பு கிடைக்கும்!

Sex
 
தாம்பத்ய உறவில் உள்ள மகிழ்ச்சிகரமான செயல்பாடுகளைப்பற்றி அறிந்து கொள்வதற்காகவே வாத்சாயனார் காமசூத்ரா எழுதியுள்ளார். இதில் உள்ள 64 கலைகளையும் செயல்பாடுகளில் கொண்டுவரவேண்டும் என்று நினைப்பது இயலாத ஒன்று. ஏனெனில் நேரடியான செயல்பாடுகளில்தான் 60 சதவிகித பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்கின்றனர் என்று சமீபத்தில் எடுக்கப்பட்ட புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கிறது.



புதிதாய் திருமணமானவர்கள் தாம்பத்ய உறவின் ரகசியத்தை அறிந்து கொள்ளவேண்டும் என்பதற்காகவே கோவில் சிலைகளில் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன. காமசூத்ரா நூலில் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள நிலைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமெனில் தம்பதியரின் உடல்அமைப்பு ஒத்துழைக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். இல்லையெனில் வலியும் வேதனையும்தான் மிஞ்சும். இதன்பின் தாம்பத்ய உறவின் மீது வெறுப்பு ஏற்பட்டுவிடும் என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



சில சித்திரங்களின் வடிவங்களுக்கு மட்டுமே உயிரோட்டம் தரமுடியும் என்று கூறும் நிபுணர்கள் அனைத்து பொஸிசன்களையும் முயற்சித்து பார்ப்பது முடியாத காரணம் என்கின்றனர் நிபுணர்கள். காமசூத்ராவில் வடிக்கப்பட்டுள்ள சில பொசிஷன்களுக்கு உடல்வாகு என்பது மிகவும் முக்கியம். உடல்வாகைப் பொறுத்தே உடல்கள் இணைந்து மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும்.ஏனெனில் மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோதெரபி எக்சைஸ் எடுக்க வேண்டிய அவசியம் வந்து விடும்.



தாம்பத்ய உறவின் மூலம் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடல் சங்கம உறவை வைத்துக்கொள்ளலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது என்கின்றனர் நிபுணர்கள். கோவில் சிலைகளில் வடிக்கப்பட்டுள்ள சிலைகள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் தம்பதியரின் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு கொண்டுவரும். ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை உண்டுபண்ணும் என்கின்றனர் நிபுணர்.



ஆனால் சிலைகளைப் போல ஈடுபட்டால் வலிதான் மிஞ்சும். செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடுபட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. எனவே உடல்வலியால் துடிக்க வைத்து மனவலியையும் உருவாக்கி கண்ணீர் விட வைக்கும் செக்ஸ் அவசியமற்றது என்று கூறுகின்றனர் நிபுணர்கள். இயல்பான நிலையில் உறவில் ஈடுபட்டாலே இன்பமாக வாழலாம் என்பதும் நிபுணர்களின் அறிவுறுத்தலாகம்.




English summary
The Kama Sutra; a quite epic tome of sex positions scribed by some Indian chap. Problem was it was written in Sanskrit, so it wasn't much good if you were living under Roman rule in ancient Britain. Books were also seriously expensive, so failing being a King, you probably couldn't afford it. The Kama Sutra was out of reach and out of your language
Story first published: Saturday, July 14, 2012, 16:59 [IST]

Get Notifications from Tamil Indiansutras