•  

முன் விளையாட்டுக்கு முக்கியத்துவம் தரும் பெண்கள்!

Sex
 
தாம்பத்ய உறவை விட முன் விளையாட்டுக்களை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. உறவுக்கு முந்தைய முன்விளையாட்டுகள்' விஷயத்தில் தமிழகப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுவ தாக சர்வேயில் தெரியவந்துள்ளது



முன்விளையாட்டுக்கு முக்கியத்துவம்



பெண்களின் செக்ஸ் ஈடுபாடு பற்றி இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே எடுக்கப்பட்டது. முன்விளையாட்டுக்கள் பற்றி கேள்விக்கு பதிலளித்த பெண்கள், செக்ஸ் உறவிற்கு முந்தைய விளையாட்டுக்கள் சுவாரஸ்யமானவை. சென்னைப் பெண்கள் இந்த விளையாட்டுக்களை 92 சதவீதம் பேர் விரும்புகின்றனர். அதிலேயே தங்கள் ஆசை நிறைவேறுவதாக 64 சதவீதம் பேர் கூறியுள்ளனர். முன்விளையாட்டுக்களை விரும்புவரில் டெல்லி பெண்கள் இதில் இரண்டாம் இடத்தையும், மும்பை பெண்கள் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.



கணவருக்கும்- மனைவிக்கும் வேறுவிதமான பொழுது போக்கு வா ய்ப்புகள் மிக குறைவாக இருப்ப தால், தமிழ்நாட்டு தம்பதிகள் 30-35 வயது வாக்கில் வாரத்தில் மூன்று முறை தாம்பத்ய உறவு கொள்கிறார்கள் என்கிறது சர்வே. 68 சதவீத தமிழ்நாட்டுப் பெண்கள் மாதத்தில் ஐந்து நாட்கள் முதல் 12 நாட்கள் வரை உறவு வைத்துக் கொள்வதாக சொல்கிறார்கள். மாதத்தில் 20 முதல் 25 நாட்கள் தொடர்பு கொள்வதாக 7 சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள். மீத முள்ள வர்கள் மாதத்திற்கு 2 நாள் என்ற கணக்கை பின் பற்றுகிறார்கள்.



டெல்லி, மும்பை போன்ற நகரத்தில் உள்ள அதே பருவ தம்பதிகள் இதர வெளி பொழுது போக் குகளிலும் ஆர்வம் காட்டுவதால் அவர்கள் தாம்பத்ய தொடர்புக்கு இரண்டாம் இடம்தான் கொடுக்கிறார்கள். மும்பை, டெல்லியில் 72 சதவீதம் பெண்கள் மாதத்தில் 5 முதல் 8 நாட்கள் என்று கூறியிருக்கிறார்கள். மீத முள்ள 28 சதவீதத்தில் பெரும் பகுதியினர் மாதத்தில் ஒரு தடவை என்று பதிவு செய்திருக் கிறார்கள்.



பேச்சில் கவரும் பெண்கள்



ஆசையை வெளிப்படுத்தி, தாம்பத்யத்திற்கு கணவரை அழைப்பதில் இன்னும் பெண்கள் பழைய நிலையிலே இருப்பதாக சர்வே குறிப்பிடுகிறது. 81 சதவீத பெண்கள் கணவரின் விருப்பமே அதில் தொடக்கமாக இருக்கிறது என்கிறார்கள். 7 சதவீத பெண்கள், அவருக்கு அலு வலகத்தில் வேலை முடியும் முன்பே, போன் செய்து - சீக்கிரம் வந்து விடுங்கள் உங்களுக்காக காத்திருக்கிறேன்-' என்று குறிப்பால் உணர்த்துவதாக சொல்கிறார்கள். மாதவிலக்கு முடிந்த அடுத்த சில நாட்களில் இயல்பாகவே ஆசை அதிகரிக்கும். அப்போது நடை, உடை, பேச்சு மூலம் எளிதாக கணவரை ஈர்த்து தயாராக்கி விடுவோம்' என்றும் குறிப்பிட்ட சதவீத பெண்கள் கூறியிருக்கிறார்கள்.



நிறைகுறை விவாதம்



உறவு முடிந்த உடன் எப்படி இருந்தது என்பது பற்றி பேசுவதில் தமிழ்நாட்டுப்பெண்கள் பின்தங்கிதான் இருக்கிறார்கள். அதுபற்றி பேசினால் கணவருக்குப் பிடிக்காது என்று 42 சதவிகிதப் பெண்கள் கூறியிருக்கின்றனர். குறிப்பால் உணர்த்துவதாக 29 சதவிகித பெண்களும், தயக்கமின்றி பேசுவோம் என்று 14 சதவிகிதம் பேரும் கூறியுள்ளனர். ஆனால் 15 சதவீத பெண்களோ அவரால் முடிந்தது அவ்வளவுதான் இதில் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்று கூறியிருக்கின்றனர். ஆனால் வடஇந்தியப்பெண்கள் 81 சதவீதம்பேர் உறவிற்குப்பின் அதன் நிறைகுறைகள் பற்றி கணவரிடம் மனம் விட்டுப் பேசுவதாக' கூறியிருக்கிறார்கள்.



திருப்தியில்லை



திருமணமாகி ஐந்தாண்டுகள் கடந்த பெண்களிடம், நீங்கள் உறவில் எந்த அளவிற்கு திருப்தி அடைகிறீர்கள்?' என்று கேட்கப்பட்ட கேள்விக்கு 31 சதவீத பெண்கள் மட்டுமே திருப்தி அடைவதாகக் கூறியிருக்கி றார்கள். 44 சதவீத பெண்கள் திருப்திபட்டுக் கொள்வதாகவும், 12 சதவீதம் பேர் திருப்தியில்லை என்றும் கூறியிருக் கிறார்கள். மீதமுள்ளவர்கள் கருத்து கூற மறுத்திருக்கிறார்கள்.




English summary
It is a well-known fact that women want, or rather need, foreplay. A woman's body needs a little bit more coaxing than a man's body does. Therefore, foreplay is as important to women as sex is to men. Women enjoy sex more emotionally as well as physically and it helps us reach an orgasm that much faster when we've had a good amount of foreplay beforehand.
Story first published: Wednesday, August 1, 2012, 14:20 [IST]

Get Notifications from Tamil Indiansutras